மூதூர் ஆலிம் நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை - மடக்கிப்பிடித்த மக்கள்!!
மூதூர் ஆலிம் நகர் பகுதிக்குள் இன்று (21) திகதி அதிகாலை மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
வாவிகள் மற்றும் குளங்களில் நீர் நிறைந்து காணப்படுவதனால் அவற்றிலிருந்து முதலைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் உள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிராம மக்களால் பிடித்து கட்டப்பட்ட முதலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மனித நடமாட்டம் அற்ற நீர்நிலையில் விடுவிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.