பஸ் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றிய ராணுவ வீரர்






500அடி பள்ளத்தில் தலைகீழலாக கவிழ்ந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து....!

கொத்மலை பேருந்து விபத்தில் 21 பேர் பலி  58 பேர் காயம் .

நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் 11.05.2025. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 500அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்து சம்பவத்தில் 21 பேர் உயிர்ழந்துள்ளதாகவும் 58பேர் காயமடைந்துள்ளதோடு மேலும் பலரின்  நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் 11.05.2025. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 500அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்து சம்பவத்தில் 12 பேரை மீட்டேன் என அந்த பஸ் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆண் பயணி ஒருவர் தெரிவித்தார்.  

இராணுவத்தில் பணியாற்றும் இந்த பயணி, விடுமுறையை முடித்துக்கொண்டு முகாமுக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார். பஸ் சற்று வேகமாக வந்தது. 

அவ்விடத்தில் திடீரென பிரேக் அடிக்கப்பட்டது. அப்போது பஸ், இடதுபுறத்தில் புரண்டு விழுந்து விபத்துக்கு உள்ளானது. நான், மயங்கி விட்டேன், எனினும், ஓரிரு நிமிடங்களில் மயக்கம் தெளிந்தது. கடுமையாக பாதிக்காதவர்களை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, ஏனையவர்களை மீட்டேன், மூன்று அல்லது நான்கு சின்ன பிள்ளைகளையும் மீட்டேன். மொத்தமாக 12 பேரை மீட்டேன் என்றார். 


Post Comments

Powered by Blogger.