அக்கரைப்பற்று நோக்கிப்பயணித்த வேன் விபத்து - பலர் காயங்களுடன் வைத்தியசாலையில்
சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பலர் வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப்பயணித்த வேனும் செங்கலடிப் பிரதேசத்திலிருந்து வாழைச்சேனை நோக்கிப்பயணித்த பட்டா ரக லொறியுமே நேருக்கு நேர மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் பட்டா ரக வண்டியில் பயணித்த நால்வரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களபு போதனா வைத்திய்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், வேனின் சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்துடன், வேனில் பயணித்த ஒரு சிலர் சிறு சிறு காயங்களுக்க்குள்ளாகியுள்ளதுடன், இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.