காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்பட்டுவரும் வடிகானில் முறைகேடு -- கபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.எம். மீராஸாஹிப் கண்டனம்-

 காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் நூறு மீற்றர் தூரம் வலது பக்கம் ஆரம்பித்து  பிரதான வீதிவரைக்கும் கொண்டு செல்ல வேண்டிய வடிகான்  அந்த பகுதியில் வீதியில் வீடு ஒன்று அமைந்திருப்பதால் அரசியல் செல்வாக்கினால் அதனை நிறுத்தி வீதியின் இடதுபக்கம் வடிகானை மாற்றி  நிர்மானிக்கப்பட்டு வருவது   ஒரு  முறைகேடான செயலாகும் என சமூக செயற்பாட்டாளரும் கபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் தேசியமானிய ஏ.சி.எம். மீராஸாஹிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


குறித்த வீதி வீதி அதிகார சபைக்கு செந்தமான வீதியில் வலது பக்கமான பிரதான வீதி வரைக்கும் வடிகான் அமைக்க திட்டமிடப்பட்டு அமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு சுமார் நூறு மீற்றர் தூரம் வரை நிர்மானப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு வீதியில் வீடு ஒன்ற அமைக்கப்பட்டிருப்பதால் வடிகானை தொடராது இடையில் நிறுத்திவிட்டு அதனை வீதியின் குறுக்கே  திருப்பி இடது பக்கம் வடிகானை நிர்மானித்து பிரதான வீதிவரைக்கு கொண்டு செல்லம் ஒரு பிழையான முறையில் வடிகானை நிர்மானித்துவருவது ஒரு முறைகேடாகும். 

இந்;த வீதியில் வீடு அமைக்க முதலில் யார் அனுமதி வழங்கியது இது அரசியல் செல்வாக்குடன் இப்படி நடக்கும் என்றால் எப்படி இந்த வீதியை அபிவிருத்தி செய்வது இது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி இவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருந்தனர் வீதி அதிகாரசபை நகசைபைக்கு எனவும் நகரசபை வீதி அதிகார சபைக்கு என ஆளுக்கு ஆள் மாற்றிக் கொண்டிருக்pன்றனர் ஆனால் மக்களுக்கு தீர்வு இல்லை. எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்தார்.




Powered by Blogger.