மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் பிரிவில் கடமையாற்றிய உத்தியோகளுக்கு சேவை நலன் பாராட்டும் நிகழ்வு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகளுக்கு சேவை நலன் பாராட்டும் நிகழ்வானது மாவட்டத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய உத்தியோகத்தர்களின் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எம்.எம் அஷ்ரப் தலைமையில் தேசிய அனர்த்த நிவாரன சேவைகள் நிலைய மாவட்ட இணைப்பாளர் ம.சுரேஸ்குமார் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (09) இடம் பெற்றது.
இதன் போது அனர்த்த நிவாரண சேவைகள் பிரிவில் கடமையாற்றிய உத்தியோகளின் அனுபவ பகிர்வுகள் இடம் பெற்றதுடன் மாவட்ட அரசாங்க அதிபருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் அவர்கள் கலந்து கொண்டார்.