மட்டக்களப்பு வணக்கத்திற்குரிய பொன்னையா யோசப் ஆண்டகை இன்று (19) இறையடி சேர்ந்தார்.

 மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த மட்டக்களப்பு மறைமாவட்ட முதல் ஆயரும் ஓய்வுநிலை ஆயருமான வணக்கத்திற்குரிய பொன்னையா யோசப் ஆண்டகை இன்று (19) இறையடி சேர்ந்தார்.


1980 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு விவிலிய இறையியல் பட்டம், முனைவர்பட்டம் போன்றவற்றை பெற்று 2008 பெப்ரவரி துணை ஆயராகவும், பின்னர் 2012ம் ஆண்டு மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டு சமய, சமூகப்பணிகளை ஆற்றிய மறைந்த யோசப் பொன்னையா ஆண்டகையின் ஆன்மா அமைதியில் இளைப்பாற இறைவனை பிராத்திக்கின்றோம்.


Powered by Blogger.