பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு பதுளை நகர் வரை வந்து சரிமாரியாக வாள் வீச்சு தாக்குதல்
பதுளை நகர மையத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் 20.05.2025 ஆம் தேதி மாலை, ஒரு சகோதரர் தனது தம்பியை சுமார் பத்து நிமிடங்கள் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியதோடு சரிமாரியாக வாள் வீச்சு ஊடாக காயப்படுத்திக் தாக்கி இருந்தார். குறித்த வாள் வெட்டு தாக்குதல்களின் போது உடம்பு முழுவதும் பல வெட்டு காயங்களுடன் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"நீ அருகில் வந்தால், உன்னை வெட்டுவேன்" என்று சந்தேக நபர் குறித்த சம்பவத்தில் காயமடைந்த வரை காப்பாற்ற முயன்ற போது அனைவருக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் கத்திக் கொண்டிருந்ததால், அனைவரும் குறித்த நபரை நெருங்க பயந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் பதுளை காவல்துறையின் ஓட்டுநர் மற்றும் சார்ஜென்ட் நிலந்த என்று கூறிக்கொண்ட ஒரு இளைஞன் அங்கு வந்து, சந்தேக நபரின் வார்த்தைகளுக்கு அஞ்சாமல், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்தனர்.
பல பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தில் பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் குறித்த சந்தேக நபரை கைது செய்ய முயற்சித்தமை பாராட்டத்தக்கது,
குறித்த சம்பவம் தொடர்பாக,
பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பொலிஸார் நேற்றைய வர்த்தகர் மீதான வாள் வெட்டு தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.