நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ஏற்படவுள்ள மாற்றம்

 நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.




வானிலை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலே, மேலுள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ள.

இதில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, தென்மேற்கிலிருந்து தெற்கு நோக்கி மணிக்கு 10-15 கி.மீ  வேகத்தில் காற்றின் வேகம் காணப்படும்.

சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 100 கி.மீ. வரை அதிகரிக்கும்.இது சுமார் 40 வரை செல்லலாம். சிலாபத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது சற்று கொந்தளிப்பாகக் காணப்படும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்தக் கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், பின்னர் அது தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Powered by Blogger.