திட்டமிட்டு அரியநேந்திரனை பழிவாங்கும் தமிழரசுக் கட்சி


கிழக்கில் உண்மையான தமிழ் தேசியவாதி #அரியநேத்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதமைக்கான காரணம் என்ன? இதற்குப் #போலித்_தமிழ்_தேசியவாதிகளேதான்_கரணம்.

தமிழ் மக்களது அனைத்துப் பலமாகவும் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளது, தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதன் பின்னர். தமிழ் மக்கள் தமது அரசியல் பலம் பொருந்திய சக்தியாக நோக்கப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே நம்பி வாக்களித்து தமது அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து வருகின்றார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் பலம் பொருந்திய சக்தியாகக் காணப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்காக, தமிழ் மக்களின் அரசியல் பலத்தைச் சிதைப்பதற்காக திட்டமிடப்பட்ட பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் அரியநேத்திரன் போன்ற உண்மையான தமிழ் தேசியவாதிகளை ஒதுக்கி ஓரங்கட்டி போலிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

அரியநேத்திரனைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படாதமைக்கான காரணம் என்ன? அரியநேத்திரன், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை உள்ளார்ந்த ரீதியாக உண்மையாகவே ஏற்றுக்கொண்டு செயற்படுகின்றமைதான் முக்கிய காரணம். அச்சுறுத்தலான காலங்களிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வடக்கில் சிறீதரனும் கிழக்கில் அரியநேத்திரனும், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம்மையே ஈகம் செய்த மாவீரர்களை கார்த்திகை-27 மாவீரர் நாளில் நினைவுகூர பின்னின்றதல்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்களை நினைவுகூர்வதை விரும்பாது சட்டவிரோதமானது எனக்கூறி சட்டம் பேசும் புலி எதிர்ப்புவாத மாமேதைகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் முக்கிய பொறுப்புக்களில் இருந்து செயற்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்கு அரியநேத்திரன், சிறீதரன் போன்ற உண்மையான தமிழ் தேசியவாதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தொடர்ந்தும் இருப்பது பெரும் தலையிடியாகவே அமைந்து காணப்படுகின்றது.

வடக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீது கைவைத்தால் இப்போதிருக்கும் நிலையில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்...

கிழக்கில் உண்மையான தமிழ் தேசியவாதி அரியநேத்திரன் திட்டமிடப்பட்டே ஓரங்கட்டப்படுகின்றார். 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அரியநேத்திரனுக்கு எதிராக சிங்கள தேசத்தின் கட்சியில் வேட்பாளராகக் களமிறக்கப்படு தமிழ் மக்களின் வாக்குக்களைச் சிதைக்கக் காரணமாகவிருந்த அதே வேட்பாளரான சாணக்கியன் என்பவரை இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகக் களமிறக்கி அரியநேத்திரனை வேட்பாளராகத் தெரிவுசெய்யாமல் ஓரங்கட்டும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் புலி எதிர்ப்புவாதிகள் சிலர் எடுத்துள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல. இதனது விளைவுகளை விரைவில் அனுபவிக்க நேரிடும். இதன் தாக்கம் தமிழ் மக்களுக்கே. மக்கள் தான் பாவம்.
Powered by Blogger.