ஏறாவூரில் வர்த்தகர் ஒருவரிடம் 11 இலச்சம் ரூபாவுக்கு காசோலை வழங்கி முந்திரிகை பருப்பு கொள்வனவு செய்து காசோலை மோசடி செய்த நபர் கைது.
மட்டு ஏறாவூரில் முந்திரிகை பருப்பு வர்த்தகர் ஒருவரிடம் காசோலையை வழங்கி 11 இலச்சம் ரூபாவுக்கு முந்திரிகை பருப்பை கொள்வனவு செய்துகொண்டு வழங்கிய காசோலைக்கான பணத்தை வழங்காது மோசடி செய்த நபர் ஒருவரை ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து நேற்று செவ்வாய்கிழமை (08) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.
குறித்த பிரதேசத்திர் முந்திரிகை பருப்பு வர்த்தகத்தில் ஈடுபடும் முதலாளி ஒருவரிடம் அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் திகதி ஒன்று இடப்பட்டு 11 இலச்சம் ரூபா காசோலை ஒன்றை வழங்கி அந்த தொகைக்கான முந்திரிகை பருப்பை கொள்வனவு செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த திகதியில் முந்திரிகை பருப்பை கொள்வனவு செய்தவர் வழங்கிய காசோலையை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளவதற்காக வங்கிக்கு சென்று காசோலையை வழங்கிய போது அந்த காசோலைக்கான பணம் வங்கில் வைப்பில் இல்லாததையடுத்து காசோலை திரும்பியது.
இதனையடுத்து திரும்பிய காசோலைக்கான பணத்தை குறித்த நபரிடம் தொடர்பு கொண்டு வாங்க முயற்சித்தபோதும் அது முடியாததையடுத்து மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவிடம் காசோலை மோசடி தொடர்பாக குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்தார்.
இச் சம்பவம் தொடர்பாக காசோலையை வழங்கிய நபரை திங்கட்கிழமை (07) ஏறாவூரில் வைது கைது செய்து நேற்று செவ்வாய்கிழமை ஏறாவூர் சுற்றலா நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் குற்றத்தை ஒப்பு கொண்டு அதற்கான பணத்தை வழங்குவதாக நீதிமன்றில் அறிவித்ததையடுத்த அவரை அடுத்த வழக்கிற்கான திகதியிடப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு அவரை பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்து பிணையில் விடுவித்தார்.