இலங்கையில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தேவராசாவின் 39 வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!
இலங்கையில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தேவராசாவின் 39 வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!!
கடந்த 1985 ஆண்டு டிசம்பம் மாதம்
இலங்கையில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 25.12.2025 திகதி காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடிய ஊடக கற்கைகள் வள நிலையத்தில் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாரை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணன் தலைமையில் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் செயலாளர் உ.உதயகாந்த் (ஜே.பி) யின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன் போது மறைந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் திருவருவப் படத்திற்கு அன்னாரின் உறவினரான அக்கரைப் பாக்கியம் அவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் உறுப்பினர்களினால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாரை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணனினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து அன்னாரது உறவினரான அக்கரைப் பாக்கியம் அவர்களினால் அன்னாரது மறைவு தொடர்பான பேருரையும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








