செய்தியாளர்:ரப்பானந்தா அரேஷ்.
லண்டன் , ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் திருவிழா நிகழ்வானது (10) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் மிக பிரமாண்டமாக இடம்பெற்றது .
தேர் திருவிழாவில் லண்டன் மற்றும் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .
மேலும் காவடி , பால்குடபவனி, தீச்சட்டி , அலகு குத்துதல் , அங்கபிரதட்ஷனை போன்ற வேண்டுதல் வழிபாடுகளும் இடம்பெற்றது . அடியார்களுக்கு தாக சாந்தியும் மற்றும் இறுதியாக அன்னதானமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்
தேரோட்டத்தில் கலந்த கொண்ட பக்தர்களுக்கு ஆங்காங்கே தாகசாந்திகள் அமைக்கப்பட்டிருந்தன .