மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் ரயில்வே கடவையில் ரயிலில் கார் ஒன்று மோதிய விபத்தில் காரை செலுத்தி வந்தவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை (18) பிற்பகலில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த ரயில்கடவையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக காவலாளி இல்லாததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
இது பற்றி தெரியவருவதாவது
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிக் கொண்டு சென்ற ரயில் சம்பவதினமான இன்று பகல் ஒரு மணியளவில் மட்டக்களப்பு புகையிரத்தை அண்டிய பகுதியை வந்தடைந்த போது அங்கு ஜயந்திபுரம் ரயில்வே கடவையின் கதவுகள் மூடாததையடுத்து அதன் ஊடாக பிரயாணித்த காருடன் ரயில் மோதிய விபத்தில் காரை செலுத்தி சென்ற ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய இரு பிள்ளையின் தந்தை படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்துளள்ளதுடன் குறித்த ரயிவே கடவையை காவலாளி இல்லாததால் இந்து விபத்து இடம் பெற்றுள்ளதுடன் குறித்த ரயில் கடவை தொடக்கம் மாவட்டத்திலுள்ள ரயில் கடவை காவலாளிகளை பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டு இவர்களுக்கு பொலிஸ் திணைக்களத்தினால் மாதாந்தம் 7 ஆயிரத்து 500 ரூபா சம்பளமாக கொடுக்கப்பட்டுவருகின்றது
இந்த நிலையில் பொலிசாரால் நியமிக்கப்பட்ட ரயில் கடவை காவலாளிகள் சம்பளம் போதாது காரணமாக அந்த வேலையில் இரந்து விலத்தியுள்ள நிலையில் கறித்த கடவைக்கு கடந்த 3 மாதங்களாக காவலாளி இல்லாதநிலை இருந்தபோதும் குறித்த கடவை ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றம் பொதுமக்கள் அதிகமாக பிரயாணம் செய்துவருதுடன் அதிகமாக குடியிருப்புக்களை கொண்ட பகுதியாகும்.
இவ்வாறான நிலையில் அடிக்கடி ரயில் பிரயாணிக்கும் போது ரயில் கடவை கதவுகளை மூடுவதற்கு திறப்பதற்கு காவலாளி எவரும் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத கடவையில் அடிக்கடி இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்றுவருகின்றது
உனவே உடனடியாக ரயில்வே கடவைகளுக்கு காவலாளிகளை நியமித்து பொதுமக்களை காப்பாற்ற பொலிசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக கவனம் செத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.