மட்டக்களப்பில் காணாமல் போயுள்ள குடும்பஸ்தர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்கவும் பொலிசார் கோரிக்கை

 மட்டக்களப்பு புதூரைச் சோந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 26ம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் 



நகரிலுள்ள உணவகத்தில் வேலை செய்து வந்த புதூரைச்சேர்ந்த 56 வயதுடைய கணேஸ்விக்கினேஸ்வரன் கடந்த 19ம் திகதி வழமைபோல வீட்டில் இருந்து உணவகத்திற்கு வேலைக்கு சென்றவர் அன்று வீடு திரும்பாத நிலையில்  அவரை உறவினர்கள் தொடர்பு கொண்ட போது மாமாங்க கோவில் உற்றவத்தையிட்டு அங்கு  தான் வேலை செய்யும் முதலாளி உணவு கடை அமைத்துள்ளதாகவும் அங்கு நிற்பதாக தெரிவித்துள்ளார்.


இதன் பின்னர் கடந்த 26 ம் திகதி முதலாளி சம்பளம் தரவில்லை தந்ததும் வருவதாக தொலைபேசி ஊடாக தெரிவித்து கொண்டார் அதன் பின்னர் கோவில் உற்றவம் முடிவுற்ற பின்னர் அவரின் தொலைபேசி செயலிழந்துள்ளதையடுத்து அவர் வீடு திரும்பாததையடுத்து அவரை உறவினர்கள் தேடியும் அவரை காணவில்லை என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்


எனவே இந்த புகைப்படத்தில் இருப்பவர் தொடர்பாக தகவல்கள் கிடைத்தால் உடனடியாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கே அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 




Powered by Blogger.