ஓட்டமாவடி பிரதேச சபையை ஜக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி மாறி தவிசாளராக தெரிவு செய்து ஆட்சியை கைப்பற்றினர்
மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஜக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு கட்சி தாவி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டு அந்த சபையை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி இன்று திங்கட்கிழமை (16) கைப்பற்றியுள்ளது
குறித்த பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு செய்யும் அமர்வு இன்று திங்கட்கிழமை (16) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரு உறுப்பினர் அமர்வில் கலந்து கொள்ளாத நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் அமர்வின் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மாறி தவிசாளராகவும் ஜக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எம்.எம்.எஸ்.எம். கலாட்டீன் ஆகியோர் தவிசாளருக்கு போட்டியிட்டனர்.
இதன்போது திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது சிறிலங்கா முஸ்லீம காங்கிரஸ் கட்சிக்கு மாறிய முகமட் ஹனிபா முகமட் பைறூஸ் 9 வாக்குகளால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பிரதி தவிசாளருக்கு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சபை உறுப்பினர் ஏ.எச்.நூபைஸ், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எல்.எல்.எம். யலால்தீன் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் பிரதி தவிசாளராக முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சபை உறுப்பினர் ஏ.எச்.நூபைஸ் 9 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.
19 உறுப்பினர்களைக் கொண்ட கோறளைப்பற்று மேற்கு சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 08 உறுப்பினர்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 06 உறுப்பினர்களையும் தேசிய மக்கள் சக்தி 02 உறுப்பினர்களையும், இலங்கை தமிழ் அரசு கட்சி – 01 உறுப்பினரையும், சுயேட்சைக்குழு 01 உறுப்பினரையும் பெற்றுக் கொண்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், எம்எல்எம் கிஸ்புல்லா மற்றும் ஏறாவூர் நகரசபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி நா.உறுப்பினர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லா, தமிழரசு கட்சி நா.உறுப்பினர் இரா. சாணக்கியன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது