தமிழ் தேசிய கூட்டணியை அரசியல் இருந்து அகற்ற வேண்டும் என தமிழரசு கட்சியினர் செயற்பாடு--முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்

 வடக்கு கிழக்கில் இருந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அரசியல் அரங்கில் அகற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழரசு கட்சியினர் செயற்படுகின்றனர் எனவே தியாகிகளை துரோகிகள் எனவும் துரோகிகளை தியாகிகள் எனவும் போராட்ட த்தையே அதன் இழப்புக்கள். மக்கள்பட்ட துன்பங்கள் அறியாதவர்கள் வெறுமனவே 2010 பின் அரசியலுக்குள் வந்தவர்களும் அதையொட்டி பிறந்தவர்களும் தாங்கள் தான் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தலைவர்கள் என நினைக்கும் தலைக்கனத்தை தமிழ் மக்கள் தகத்தெறிய வேண்டும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் 

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபாவின் 35 வது தியாகிகள் தின நினைவேந்தல் நேற்று சனிக்கிழமை (21) மு.கி.மாகாண உறுப்பினர் இரா .துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

உண்மையில் 35 ஆவது நினைவேந்தல் என்பது இன்றுடன் முடிந்து போவது அல்ல காலம் காலமாக இப்படியான நினைவுகள் நினைவு கூறப்படவேண்டிய ஒரு தேவை கட்டாயம் எங்களுக்கு இருக்கின்றது

இந்த நாட்டில் அடிமைகளாக இரண்டாம் தர பிரைஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம் தமிழினத்தின் உரிமைகளை பெறுவதற்காக அகிம்சை ரீதியாக ஆயுத ரீதியாக போராடிய எங்களுடைய இனம் 7 சதாப்தங்களுக்கு மேலாக இன்றுவரை போராடிக் கொண்டு இருக்கின்றனர்.  

1983 ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய இன அழிப்பை தொடர்ந்து விடுதலை போரட்ட இயக்கங்கள் வீறு கொண்டு எழுந்தன அந்த வகையில் 5 போராட்ட இயக்கங்கள் முன்னணியில்  இலங்கை பேரினவாதத்திற்கும் பாதுகாப்பு படைக ளுக்கும் எதிராக போரிட்டார்கள் அந்த காலகட்டத்தில் தான் இலங்கை அரசு 5 இயக்கங்களுடன் திம்பு பேச்சுவார்த்தை நடந்தது அதில் எதுவும் நடைபெறவில்லை போராட்டம் தொடர்ந்தது 

தனித்தனியாக இந்த போராட்ட இயக்கங்கள் போராடினால் எங்களுடைய இலக்கை அடைய முடியாது என்ற காரணத்தினால் ஈழ தேசிய முன்னணி என்ற ஒரு கூட்டமைப்பு தோழர் பத்மநாபா உருவாகினார் அதில் சிறிசபாரட்ணம், தோழர் பாலகுமார், என மூன்று இயக்கங்களும் ஒரே அணியாக செயற்பட்டபோது விடுதலைப் புலிகள் அதில் இணைந்து கொண்டனர். 

துரஸ்டவசமாக இந்த போராட்ட இயக்கங்களுக்குள் 1986 ம் ஆண்டு முறுகள் ஏற்பட்டது இதனையடுத்து விடுதலைப் பாதை வேறு திசை திரும்பபட்டது இயக்கங்களுக்குள் மோதல் இயக்கங்களுக்கும் இலங்கை பாதுகாப்பு படையின ருக்கும் மிடையே மோதல்.

இவ்வாறான ஒரு சூழலிலே போராட்டகளத்தில் ஒரே இயக்கமாக விடுதலைப் புலிகள் இருந்தாலும் அரசியல் ரீதியாக எங்களுக்குள் ஒற்றுமை வரவேண்டும் என கடந்தகால கசப்பான சம்பங்களை மறந்து எமது மக்களது உரிமைக்காக ஒன்றாக செயற்பட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி 2001 ஆண்டு விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது உருவாகியது.

2009 ம் ஆண்டுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் எந்த விதமான முரண்பாடுகளும் இல்லாமல் இருந்தது இந்த ஆயுத போராட்டம் மௌனிப்பட்டதன் பின்பு அரசியல் ரீதியாக போராடிய கட்சிகளுக்குள் மிதவா கட்சிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டு ஒரு திக்கு திசை தெரியாத நிலையிலே கட்சிகளும் மக்களும் இருந்து கொண்டி ருக்கின்றனர்.

பல முரண்பாடுகளுக்கு மத்தியில் இருந்த போராட்ட இயக்கங்கள் ஒன்று சேர்ந்தது ஆனால் 2023 ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்புககுள் படு மோசமான முரண்பாடு உருவாகியது முதன்மை கட்சியாக இருந்த தமிழரசுகட்சி உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியேறியது 

இப்போது அவர்கள் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவோம் தேர்தல் முடிந்ததும்  ஒன்றா இணைந்து ஆட்சி அமைப்போம் என்ற கோஷத்துடன் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்துள்ளார்கள் என்பது தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

2001 க்கு முன்பு பல முரண்பாடுகள் இருந்த பல போராட்ட இயக்கங்கள் ஒன்றாகும் போது இந்த உள்ளுராட்சி மன்ற தோர்தலின் பின்பு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றினைந்து ஆட்சி செய்ய கூடிய உள்ளுராட்சி மன்றங்;களில் குழப்பங்களை உருவாக்கியுள்ளனர்  
  
என்ன கோஷசத்தை வைத்தி 2023 ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து தேர்தலின் பின்னர் ஒன்றாகுவோம் என கூறியவர்கள் 2025 இல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகளை புறக்கணித்து எப்படியாவது அதிகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் ஒப்பந்தம் செய்ததுடனும்  ஜக்கிய மக்கள் சக்தியுடனும் காலம் காலமாக மாறிமாறி இலங்கையை ஆட்சி செய்த பேரினவாத சக்திகளுடன் சேர்ந்து ஆட்சி நடாத்திய ஈபி,டி.பி டக்கிளஸ் தேவானந்தாவுடனும்.

கடந்த அரசாங்கத்தில் மதுபானசாலைக்கான அனுமதி பெற்றுக் கொண்டார் என்பதற்காக  மிகவும் மோசமாக விமர்சித்த சி.வி. விக்கினேஸ்வரனுடன் கூட்டு சோர்ந்துள்ளனர்.

எனவே இந்த சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கடந்த காலங்களிலே கிழக்கு மாகாணத்தில் நடந்து கொண்ட விதங்களை எமது மக்கள் நன்கு அறிவார்கள், ஆனால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வடகிழக்கில் 106 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி அவர்களை தேடிச்சென்று பேசும் போதும் கூட எங்களை உதாசீனம் செய்கின்றனர் அவர்களுடைய நோக்கம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என ஒரு அமைப்பு வடக்கு கிழக்கில் அரசியல் அரங்கில் இருந்து அகற்றவேண்டும் ஒரே ஒரு நோக்கம். 

தமிழரசு கட்சி பதில் பொதுச் செயலாளர் மன்னாரிலே வடக்கு கிழக்கிலே இருக்கும் உள்ளுராட்சி மன்றங்களிலே கூடுதலான ஆசனங்களை பெற்றிருக்கும் தமிழரசு கட்சிக்கு ஏனையவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் அதுதான் ஜனநாயகத்தின் தார்மீகம் என ஆவேசமாக கத்தினார். 

ஆனால் ஊர்காவல்துறையிலே, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழரசு கட்சியை விட கூடுதலான ஆசனத்தை பெற்றுள்ளனர். அவர்களுக்கு நீங்கள் கூறுவதைப்போல் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு நீங்கள் ஆதரவு வழங்கினீர்களா? இல்லை அதற்கு எதிராக ஈபிடிபி யுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க முயற்சிக்கின்றீர்கள், 

அதேபோல சாவகச்சேரி நகரசபை, பருத்துறைநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை போன்ற சபைகளில் கூடுதலான ஆசனங்;களை பெறும்போது அவர்களுக்கு ஆதரவு வழங்கவேண்;டும் என நீங்கள் கூறுவது போல நடக்கவில்லை எனவே உங்களுக்;கு வசதியாக கூறுவது மட்டும் தான் ஒரு நீதி என்றால் ஏனையவர்களுக்கு ஜனநாயகம் இல்லையா? 

திருகோணமலை நகரசபை, மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச சபை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கணிசமான ஆசனங்களை பெற்றுள்ளது நாங்களும் நீங்களும் சேர்ந்தால் ஆட்சி அமைக்கும் நிலையில் எங்களை உதாசீனம் செய்துவிட்டு அந்த ஆட்சி அதிகாரத்தை ஏனையவர்களுடன் சேர்ந்து பிடிக்க முயன்று தோற்றுப் போய் இன்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கோரிக்கை அனைத்துக்கும் இனங்குவதாக அவர்கள் வரவேண்டும் என பொது வெளியில் தெரிவிக்கின்றீர்கள் எதற்காக? தமிழ் மக்களை மடையர்களாக்கி ஏமாற்றுவதற்காக

2024 பாராளுமன்ற தேர்தலில் ரேலோ , புளொட் வருமாறு அமைப்பு விடுத்தனர் எனவே நாங்கள் உங்களை போன்றவர்கள் அல்ல எங்களை நம்பி எங்களுடன் கூட்டுச் சேர்ந்தவர்களை நடுத் தெரிவில் விட்டுவிட்டு வெறும் கதிரைகளுக்காக பதவிகளுக் காக ஆசைப்படுபவர்கள் அல்ல ஒன்றை உணர்ந்து கொள்ளவேண்டும் இந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில்  இருப்பவர்கள் அரசியலுக்குள் வந்தது வெறும் கதிரைகளுக்கும் பதவிகளுக்காக ஆசைப்பட்டு அல்ல தமிழினத்தின் உரிமைகளை காப்பதற்கு அனைத்தையும் இழந்து உயிரையும் துச்சமென மதித்து போராட்டத்தை நடாத்தியவர்கள் நாங்கள் 

தோழர் பத்மநாபா மட்டும் உயிரிழக்கவில்லை அவருடன் இணைந்து எத்தனை போராளிகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல தலைவர்களை இழந்து இழப்புக்ளை சந்தித்துள்ளோம் 

2001 முன்பு 1986 க்கு பின்பு விடுதலைப் புலிகளினால் ஈபிஈர்எல்எப், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, உட்பட அதன் தலைவர்களை இழந்தும் 2001 இல் நாங்கள் ஒன்று சேர்ந்தோம் ஆனால் இந்த தமிழரசு கட்சி தலைமை எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என மிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் 

எதிர்காலத்தில் இணைந்து செயற்பட வேண்டும் அதுதான் எங்கள் மக்களுக்காவும் உயிர்நீத்த போராளிகளுக்காகவும் எமது இனம் சுhயாட்சியுடன் சுயநிர்ணய உரிமையுடன் மது தாயக்தில் வாழ்வதற்கு  நாங்கள் செய்யும் கடமையாக இருக்கவேண்டும். அதற்கு நாங்கள் ஒன்றாக ஒற்றுமையாக ஒன்றாகவேண்டும்  என்றார்.

Powered by Blogger.