கதிர்காத்துக்கான பாதையாத்திரை காட்டுவழி பாதை கிழக்குமாகாண ஆளுநர் திறந்துவைப்பு-

 கதிர்காம முருகன் ஆலயத்தில்  எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (20) வெள்ளிக்கிழமை காலை பாதயாத்திரை மேற்கொண்டனர்.


பக்தர்களுக்காக லாகுகலை உகந்தை வன பாதையின் கதவானது, உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று காலை 6.00 மணியளவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டினை தொடர்ந்து திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர்  ஜயந்த லால் ரத்னசேகர அம்பாறை, மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினர் இதன்போது கலந்துகொண்டனர்

ஆரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் தங்களது காட்டுவழிப் பயணத்தினை இன்று ஆரம்பித்தனர்.
மேலும், எதிர்வரும் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கதிர்காம உற்சவம் ஜூலை 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

அத்துடன் இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 2025.07.04 அன்று மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.